இந்திய சினிமா துறையில் மிக குறுகிய காலத்தில் முன்னணி நாயகியாக உருவெடுத்தவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த இவர் சுல்தான் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார்.இதை தொடர்ந்து கோலிவுட்டில் தளபதியின் வாரிசு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்து வந்தார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
என்னதான் இவர் கெரியரில் நல்ல புகழை அடைந்து வந்தாலும், சில நேரங்களில் மீடியாவில் இவர் பேசும் சில விஷயங்களை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருவதை வழக்கமாக வைத்து வருகின்றனர்.அப்படி இணையவாசிகள் வாய்க்கு தீனிபோடும் வகையில் தற்போது இவர் வெளியிட்ட ஒரு பதிவு சோஷியல் மீடியாவில் வைரல் கண்டு வருகிறது. அதாவது அதில் அவர் கூறியது, நான் என்னுடைய டைரியில் என் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொன்றையும் பதிவிட்டு வருகிறேன்.
நடிகர் அஜித்குமாரின் தந்தை திடீர் மரணம்..,சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!
மேலும் என் வீட்டிற்கு வரும் ஒவ்வொருவரின் பாதத்தையும் மரியாதைக்காக தொட்டு வணங்குவேன். அந்த இடத்தில் என் வீடு உதவியாளராக இருந்தாலும் சரியே. ஏனென்றால் நாம் செய்யும் எந்த ஒரு செயலும் ஒருவர் மனதை உடைக்கலாம் அல்லது உருவாக்கலாம். இதனால் தான் என் வாழ்க்கையில் வரும் அனைவருக்கும் சமமாக மதிப்பு கொடுக்கிறேன் என உருக்கமாக கூறியுள்ளார். இவற்றின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் இது என்னடா உலக உருட்டால்ல இருக்கு என நக்கலாக கமெண்ட் செய்துள்ளனர்.