ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகை திருடு போன விவகாரத்தில் ஏற்கனவே 2 பேர் கைது செய்திருக்கும் நிலையில் மீண்டும் ஒரு நபரை காவல்துறை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்:
கோலிவுட்டில் 3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கி மக்கள் மத்தியில் ரீச்சானவர் தான் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தற்போது விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்தை வைத்து லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கு இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்கிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நிலையில், ஐஸ்வர்யா வீட்டில் 60 பவுன் நகை திருடு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து ஐஸ்வர்யா கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் விசாரணை செய்து அவர் வீட்டில் வேலை பார்த்த சாந்தி என்ற பெண்ணையும் , கார் டிரைவராக வேலை பார்த்த வெங்கடேசன் என்பவரையும் காவல்துறை கைது செய்தனர்.
அதுமட்டுமின்றி அவர்கள் சிறுக சிறுக திருடிய நகைகள் அனைத்தையும் காவல்துறை கைப்பற்றியது. இந்த நிலையில் மேலும் ஒரு நபரை போலீஸ் கைது செய்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சாந்தி மற்றும் டிரைவர் திருடிய நகைகளை மயிலாப்பூரை சேர்ந்த வினால்க் சங்கர் நவாலியிடம் விற்றுள்ளனர். இதனால் திருட்டு நகைகளை வாங்கியதாக வினால்க் சங்கர் நவாலியை தேனாம்பேட்டையில் வைத்து காவல்துறை கைது செய்தனர்.