நடிகை ப்ரியா பவானி சங்கர் தனது பத்து ஆண்டு கால காதலை கொண்டாடும் விதமாக தனது காதலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரியா பவானி சங்கர்
செய்திவாசிப்பாளராக தனது பயணத்தை துவங்கிய நடிகை பிரியா பவானி சங்கர் இப்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகைகளுள் ஒருவராக உயர்ந்திருக்கிறார். செய்தி வாசிப்பாளரான இவர் தனது சினிமா பயணத்தை தொலைக்காட்சி தொடர் மூலம் ஆரம்பித்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார் பிரியா பவானி சங்கர்.
ஒருநாள் போட்டி தரவரிசை – விராட் மற்றும் ரோஹித் தொடர்ந்து முன்னிலை!!
நடிகர் வைபவுடன் இவர் நடித்து வெளிவந்த முதல் திரைப்படம் ‘மேயாத மான்’. இந்தப்படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த பிரியா அடுத்தடுத்து முக்கிய கதாநாயகர்களுடன் கைகோர்த்தார். எஸ்.ஜே சூர்யாவுடன் இவர் நடித்த ‘மான்ஸ்டர்’ திரைப்படம் வசூல் ரீதியான வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து அருண் விஜய், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ளார். இப்பொழுது தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ப்ரியா பவானி சங்கர் தனது காதலுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தற்போது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். திரைப்படங்கள் நடித்த போது அவரைப்பற்றி வெளிவந்த கிசுகிசுக்களுக்கு முற்று புள்ளி வைக்கும் நோக்கில் ஏற்கனவே தனது காதலர் ராஜவேல் என்பவரை அறிமுகப்படுத்தியிருந்தார். தொடர்ந்து அவரது பத்து ஆண்டு கால காதலை கொண்டாடும் விதமாக பத்து ஆண்டுகளுக்கு முன் அவர் காதலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை போல மீண்டுமாக அதே போல் ஒரு புகைப்படத்தை எடுத்து தற்போது பதிவிட்டுள்ளார்.