தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிசியாக இருந்து வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் உதயநிதியுடன் சேர்ந்து மாமன்னன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜூன் 29ம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில் தற்போது ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக இருந்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனை தொடர்ந்து சமீப காலமாக கீர்த்தி சுரேஷ் கல்யாணம் குறித்து தான் சோசியல் மீடியாவில் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ரசிகர் ஒருவர் செய்ததை குறித்து பேசியுள்ளார். அதாவது அவர் வீட்டில் இல்லாமல் இருந்த சமயத்தில் அவரை பொண்ணு கேட்டு ஒரு ரசிகர் வந்துள்ளார்.
வந்தது மட்டுமின்றி வீட்டு வேலைக்காரர்களிடம் கீர்த்தி சுரேஷின் கணவனாக நினைத்து கொண்டு கீர்த்தி ஏன் உதயநிதியிடம் சேர்ந்து நடிக்கிறார்? என்று உரிமையுடன் கேட்டாராம். மாமன்னன் படத்தின் இறுதியில் தான் இந்த சம்பவத்தை குறித்து உதயநிதி சாரிடம் சொன்னேன் என்று கூறியுள்ளார்.