கோலிவுட்டின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால், தன் சினிமா கெரியர் குறித்த முக்கியமான கருத்து ஒன்றை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
காஜல் கருத்து :
தமிழில் விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, அஜித்துடன் விவேகம் உள்ளிட்ட படங்களில் இணைந்து ஹீரோயினாக நடித்து அசத்தியவர் நடிகை காஜல் அகர்வால். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழி படங்களிலும் டாப் ஹீரோயினாக திகழ்ந்து வருகிறார். இவர் கடந்த கொரோனா காலகட்டத்தில், தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இவருக்கு தற்போது ஒரு குழந்தை உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின், தற்போது கமலுடன் இந்தியன் 2 உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது, கல்யாணம் ஆகி குழந்தை பிறந்த பிறகு நடிப்பதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? என கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், சினிமா என்பது எனது கனவு, இங்கு நடிப்பதற்கு உழைப்பு மட்டுமே தேவை. கல்யாணத்திற்கு முன், பின் என இதை ஏன் பிரிக்கிறீர்கள், எப்படி ஐடி துறையில் வேலை பார்ப்பவர், கல்யாணத்திற்கு பின் வழக்கம் போல் பணியாற்றுகிறாரோ? அதே போல் தான் நாங்களும், இனிமேல் இது போன்ற தேவையற்ற கேள்விகளை கேட்காதீர்கள் என காண்டாகி உள்ளார்.