விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போடும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த தொடரில் ஜெனி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ். அவர் இன்று அதிகாலை வடபழனி கோவிலுக்கு சென்று உள்ளார். அதன் பின்னர் அங்கு என்ன நிகழ்ந்ததை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
திவ்யா கணேஷ்:
சின்ன திரையில் கேளடி கண்மணி தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை திவ்யா கணேஷ். அதன் பிறகு தற்போது விஜய் டிவியில் ஹிட் தொடரான பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோக்கள் மற்றும் ரீல்ஸ் என பகிர்ந்த வண்ணம் இருப்பார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கே இவரும் மற்றும் இவருடன் சீரியலில் நடித்து வரும் நடிகை கம்பம் மீனாவும் வடபழனி கோவிலுக்கு முருகனை தரிசனம் செய்ய சென்று உள்ளனர். ஆனால் அங்கு நடந்தது என்னமோ வேறு.. அதாவது, இவர்கள் நான்கு மணிக்கு கோவிலுக்கு சென்று உள்ளார்கள். ஆனால் இவர்களுக்கு முன்னால் இரவில் இருந்தே பல பக்தர்கள் வரிசையில் முருகனை காண காத்து உள்ளனர். அதனால் வாசலில் இருந்து முருகனை தரிசனம் செய்து விட்டு அப்படியே மாங்காட்டில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளனர். இந்த சம்பவத்தை கம்பம் மீனா தன் இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்