தொற்று பரவல் எதிரொலி – பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட புதிய உத்தரவு!!

0

நாட்டின் 73வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் கொரோனா பரவல் காரணமாக தமிழக மாணவர்கள் நேரடியாக குடியரசு தின விழாவிற்கு வர வேண்டாம் என அரசு அறிவித்துள்ளது.

அரசு அறிவிப்பு:

இந்திய திருநாட்டின், 73 ஆவது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, சென்னை காமராஜர் சாலையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் பங்கேற்று  தேசியக்கொடி ஏற்றி வைக்கும் அரசு விழா நடைபெற உள்ளது. இது போக, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட உள்ளது. தற்போது கொரோனா பரவல் மிகவும் அதிகரித்து வருவதால், தமிழகத்தில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, குடியரசு தினத்தன்று  பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரடியாக குடியரசு தின விழாவிற்கு வர வேண்டாம் என அரசு அறிவித்துள்ளது. மேலும், கொடியேற்றும் நிகழ்வை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளது.  தியாகிகளுக்கு வீடு தேடி சென்று சால்வை அணிவித்து மரியாதை செய்ய அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here