நடிகர் விஜய் தன் வாழ்க்கையில் இந்த படத்துக்கு அப்புறம், இந்த தவறை மட்டும் செய்யவே இல்லை எனக் கூறி தயாரிப்பாளர் கே ராஜன் ஒரு பேட்டியில் அவரை வெளுத்து வாங்கியுள்ளார்.
நடிகர் விஜய்:
தமிழ் திரை உலகின் டாப் ஹீரோவான நடிகர் விஜய், தற்போது லோகேஷ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான பூஜை கோலாகலமாக தொடங்கியுள்ள நிலையில் விரைவில் இதன் ஷூட்டிங் ஆரம்பமாக உள்ளது. இந்த நிலையில் விஜய் குறித்த முக்கிய கருத்து ஒன்றை, தயாரிப்பாளர் கே. ராஜன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதாவது, விஜய் தனது மெர்சல் படத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியை எதிர்த்து மறைமுகமாக ஒரு கருத்து தெரிவித்திருப்பார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
ஆனால் அது அவ்வளவு பெருசு இல்ல, இருந்தாலும் நெய்வேலியில் ஷூட்டிங்கில் இருந்த அவரை வருமான வரி துறையினர் பாடாய்படுத்தி விசாரணை செய்து, வீட்டிலும் பல கட்ட சோதனைகளை மேற்கொண்டு கடைசியில் ஒன்றும் இல்லை என கூறினார்கள். அதிலிருந்து விஜய் மத்திய அரசை விமர்சனம் செய்வதை அடியோடு நிறுத்தி விட்டார்.
திண்டாடிப்போன குணசேகரனின் குடும்ப கௌரவம்.., மானத்தை வாங்கிய ஆதிரை.., பக்கபலமாக கைகொடுத்த ஜனனி!!
காரணம் அவரிடம் நிறைய பணம் இருக்கிறது. இது பற்றி பேசினால், அவரிடம் இருக்கும் சொத்துக்கள் பற்றிய விவரம் வெளியாக ஆரம்பிக்கும். இந்த பயத்தால் தான் விஜய் இது போன்ற பிரச்சனைகளில் எல்லாம் தலையிடுவதே கிடையாது என தயாரிப்பாளர் அடித்து பேசி உள்ளார். இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.