சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் இப்பொழுது ஆதிரை திருமண விஷயம் தான். அருணை தான் திருமணம் செய்வேன் என்று பிடிவாதம் பிடித்துக்கொண்டிருக்கும் நிலையில் குணசேகரன் அதற்கு ஒத்துக்கொள்ளவே இல்லை. குடும்ப கௌரவம் தான் முக்கியம் என்று வீம்பு பிடித்துக்கொண்டுள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆதிரை காலில் விழுந்து கெஞ்சியும், அதற்கு குணசேகரன் பணிந்து போகவே இல்லை. இப்படி இருக்க இப்பொழுது முக்கிய அப்டேட் வைரலாகி வருகிறது. அதாவது, ஆதிரைக்கு இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக விஷயம் புரிய வருகிறது. அதாவது ஜனனி மற்றும் மற்ற மருமகள்களுக்கு தான் எவ்வளவு கொடுமைகள் செய்துள்ளோம் என்று நொந்து கொள்வாராம்.
அப்பத்தாவின் முழு சப்போர்ட் இருப்பதால் ஓரளவிற்கு தைரியமாக இருக்கும் ஆதிரை ஓடி போகும் அளவிற்கு வந்து விடுவாராம். மேலும் குடும்ப கௌரவமே போய்விட்டதாக சொல்லி, குணசேகரன் ஆதிரையை கொலை திட்டம் போடுவாராம். அதிலிருந்தும் ஜனனி தான் காப்பாற்றுவாராம்.