நடிகர் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் ஷூட்டிங்கில் சின்னதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
லியோ திரைப்படம்:
தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அதுபோக இப்படத்தில் எதிர்பார்க்காத ஏகப்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இதனாலேயே படத்தோட எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
சமீபத்தில் கூட இப்படத்தின் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கும் என்று கூறப்பட்டது. இதனை தொடர்ந்து சில காட்சிகள் ஹைதராபாதில் எடுக்கப் போவதாகவும் தகவல் வெளியானது.
தமிழக அரசு பேருந்தில் அனைவர்க்கும் 50% கட்டண சலுகை.., அமைச்சர் வெளியிட்ட சூப்பர் நியூஸ்!!!
இந்நிலையில் லியோ படத்தின் ஷூட்டிங்கில் சின்னதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சென்னையில் நடக்கும் லியோ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் 4ம் தேதி தான் தொடங்குகிறதாம். அதுமட்டுமின்றி ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடத்த போவதில்லை என்றும் அதற்கு மாறாக சென்னையிலே மொத்த படப்பிடிப்பை நடத்தி முடிக்க இருப்பதாக பிரபல சினிமா பத்திரிகையாளர் கூறியுள்ளார்.