கோலிவுட் திரையில் தளபதி என்ற புகழுடன் ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இதுவரை சினிமாவில் ஹீரோவாக நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வந்த இவர் அண்மையில் அரசியலில் களமிறங்கியுள்ளார். மேலும் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி தொடங்கி அதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு ஏகப்பட்ட நலத்திட்டங்களை செய்து வருகிறார். இப்படி சினிமா மற்றொரு பக்கம் அரசியல் என பிசியாக இருந்து வரும் இவரது இல்லற வாழ்க்கை குறித்து பல வதந்திகள் வலம் வந்த வண்ணம் உள்ளது.
அதாவது பிரபல நடிகை ஒருவரால் விஜய் மற்றும் அவரது மனைவிக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டதாகவும் அதனால் அவர்கள் விவாகரத்து செய்து விட்டதாகவும் வதந்திகள் பரவி வந்தது. இப்படி இருக்க தற்போது மீண்டும் ஒரு புதிய சர்ச்சை ஒன்று கிளம்பி உள்ளது. அதாவது அண்மையில் நடிகை திரிஷா வீட்டில் IT ரைடு நடந்துள்ளது. அப்பொழுது அவர் வீட்டில் இருந்து ஒரு கோடி மதிப்புள்ள நெக்லஸ் கிடைத்துள்ளது. இதை யார் வாங்கி கொடுத்தார் என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில் அதற்கு நடிகர் விஜய் என கூறியுள்ளார். இப்படி விலை மதிப்புள்ள நெக்லஸை விஜய் திரிஷாவுக்கு வாங்கி கொடுத்துள்ளதால் மீண்டும் அவர்களது விவாகரத்து சர்ச்சை கிளம்பியுள்ளது. மேலும் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.