
தமிழ் சினிமாவில் ”பிச்சைக்காரன்” என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் விஜய் ஆண்டனி. மேலும் இசையமைப்பாளராக கோலிவுட் திரையில் களமிறங்கிய இவர் ஏகப்பட்ட ஹிட் பாடல்களை இவரது இசையில் கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் இவர் பிச்சைக்காரன் படத்தின் 2ஆம் பாகத்தை இவரே இயக்கி அதில் ஹீரோவாக நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் பல தடைகளை தாண்டி கடந்த 19 ஆம் தேதி திரைக்கு வந்த இப்படம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்து வசூலில் கல்லா கட்டி வருகிறது. இப்படி திரையுலகில் பிசியாக இருந்து வரும் இவர் அண்மையில் ஒரு பேட்டி ஒன்றில் சில சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, பல விஷயங்களை நாம் cringe என சொல்லி அதை ஒதுக்கிவிடுகிறோம். மேலும் வாழ்க்கையில் பிணைப்புக்காக தான் ஒவ்வொருவரும் ஏங்குகின்றனர். ஆனால் அவற்றை cringe என சொல்லி ஒதுக்கி விடுகின்றனர். இதுபோக பிச்சைக்காரன் திரைப்படத்தில் பல cringeகள் இருந்ததால் தான் அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது என கூறியுள்ளார்.