ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் 10 அணிகளுக்கு இடையே கடந்த மார்ச் மாத இறுதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், லீக் சுற்றுகள் அனைத்தும் நேற்றுடன் (மே 21) முடிவடைந்த நிலையில், குஜராத், CSK, LSG மற்றும் MI அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. பிளே ஆப் சுற்றுகள் நாளை (மே 23) மற்றும் மே 24 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதற்கு முன், சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டிகளை காண வரும் ரசிகர்களுக்காக மெட்ரோ ரயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. அதாவது, ஐபிஎல்லின் அன்றைய போட்டிக்கான டிக்கெட்டுகளை வைத்திருப்பதற்கும் மட்டும் ரயிலில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது பிளே ஆப் போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ள நிலையில், இந்த இலவச ரயில் பயணம் இனி வரும் போட்டிகளுக்கு இல்லை என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், மெட்ரோ ரயிலில் பயணிக்க பயணச்சீட்டு கட்டாயம் பெற வேண்டும். அதுவும் இரவு 11 மணிக்கு பிறகு டிக்கெட் கவுண்டர்கள் திறந்திருக்காது எனவும், ஐபிஎல் போட்டியை காண வரும் ரசிகர்கள் முன்கூட்டியே டிக்கெட்டுகளை எடுத்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஐபிஎல் போட்டி நடைபெறும் நாளில் இரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் இயங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.