“புலிக்கு பொறந்தது பூனையாகுமா”- சிவகுமார் போல speechல மிரட்டிய சூர்யா.., பாசிட்டிவ் vibes கொட்டுறீங்களே!!

0
"புலிக்கு பொறந்தது பூனையாகுமா"- சிவகுமார் போல speechல மிரட்டிய சூர்யா.., பாசிட்டிவ் vibes கொட்டுறீங்களே!!

நடிகர் சூர்யா பாசிட்டிவாக பேசிய ஸ்பீச் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

நடிகர் சூர்யா

சினிமாவில் நடிக்க தெரியாமல் உள்ளே நுழைந்து, பல பேர் கேலி கிண்டல் செய்ததை மனதில் வைத்து விடாமுயற்சியால் விஸ்வரூப வெற்றி பெற்றவர் தான் சூர்யா. இவர் நடிக்க ஆரம்பித்த போது சில படங்கள் தோல்வியை தழுவிய நிலையில், அஜித் தட்டிக் கழித்த படங்களை கையில் எடுத்து நடித்து முன்னணி இடத்தை பிடித்தார். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

வரலாற்று கதையாக உருவாகி வரும் இந்த திரைப்படம் 10 மொழிகளில் உருவாகி வருகிறது. அதுமட்டுமின்றி இப்படம் வெளியாவதற்கு முன்பே 500 கோடிகளை வியாபார ரீதியாக வசூலித்துள்ளது. இந்த நிலையில் நடிகர் சூர்யா பேசிய பாசிட்டிவ் ஸ்பீச் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அதில் அவர் பேசியதாவது, வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்று எவராலும் கணிக்க முடியாது. யாருக்கும் என்ன வேணாலும் நடக்கலாம்.

காலம் சீக்கிரமா ஓடுதாடா.., சினிமால என்ட்ரி கொடுத்து 18 ஆண்டுகள் ஆயிடுச்சா.., தமன்னா நெகிழ்ச்சி!!

எனவே உங்களுக்குப் பிடித்த மாதிரி, மனதிற்கு தோன்றியதை செய்து வாழ்க்கையை அனுபவித்து வாழுங்கள். மேலும் நாம் நினைக்கிற எல்லாம் நடந்து விடாது. ஆனால் நமக்கு என்ன தேவையோ அது கண்டிப்பாக நடக்கும். சத்தியமா சொல்றேன் அது கண்டிப்பா நடக்கும். ஏனென்றால் அது எனக்கு நடந்திருக்கிறது என்று சூர்யா பாஸிட்டிவாக பேசியுள்ளார். இதனை தொடர்ந்து சூர்யா 42 படத்துக்கு பிறகு சீதாராமன் படத்தை இயக்கிய இயக்குனருடன் கைகோர்ப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here