தெலுங்கு திரையில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் சர்வானந்த். தமிழில் ‘எங்கேயும் எப்போதும்’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். இந்நிலையில் இவர் ”ஸ்ரீராம் ஆதித்யா” என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படி திரையுலகில் பிசியாக இருந்து வரும் இவருக்கும் IT துறையில் பணியாற்றி வரும் ரக்ஷிதா ஷெட்டி என்பவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. அதன்படி வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலஸில் வைத்து திருமணம் நடக்கயுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இவரது திருமணத்திற்கான ஏற்பாடு தற்போது வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு போக்குவரத்து கழக சங்கத்தின் சேமிப்பு திட்டம்., அசத்தலான வட்டி அறிவிப்பு!!!
இந்த நிலையில் சர்வானந் பயணம் செய்த கார் இன்று அதிகாலை 2 மணி அளவில் பிலிம் நகர் ரோட்டில் செல்லும் வழியில் சாலையின் நடுவில் இருக்கும் தடுப்பில் மோதியுள்ளது. இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சர்வானந்த்தை மருத்துவமனைக்கு அனுப்பி, விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த விபத்தில் சர்வானந்துக்கு பெரிதாக எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை என தற்போது தகவல் கிடைத்துள்ளது.