இதுவரை இல்லாத வித்தியாசமான தோற்றத்தில், நடிகர் சரத்குமார் கம்பீரமாக நிற்கும் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.
ட்ரெண்டிங் போட்டோ:
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்தினம், புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையை இரண்டு பாகங்களாக எடுத்து வருகிறார். படத்தின் முதல் பாகம், இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது. ஏற்கனவே இறுதி கட்டப் பணிகள், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இந்த படத்தில், நடித்திருக்கும் கதாபாத்திரங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழு வெளியிட்டு வந்தது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அந்த வகையில் நடிகர் சரத்குமார் பெரிய பழுவேட்டரையர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 69 வயதாகும் சரத்குமார், இந்த கேரக்டருக்கு கணக்கச்சிதமாக பொருத்தி உள்ளார். வித்தியாசமான தோற்றத்தில் கம்பீரமாக, இருக்கும் அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் எவ்ளோ வயதானாலும் இன்னும் அந்த கெத்து மட்டும் இன்னும் குறையல என கமெண்ட் செய்து வருகின்றனர்.