2020-ம் ஆண்டு பொன்னியின் செல்வன் திரைப்பட படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்ற போது சரத்குமார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டார். தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளார். இதை அவரே தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் சரத்குமார்:
தமிழகம் முழுவதும் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் துவங்கி மக்களை ஒரு வழி ஆக்கிவிட்டது. பலரும் கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர். அரசும் மக்களின் அக்கறையில் பங்கு கொண்டு கொரோனவை கட்டுப்படுத்த ஊரடங்கை பிறப்பித்தது. தற்போது மீண்டும் கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் காரணத்தினால் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது முன்னணி கதாநாயகர் மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சரத்குமார் பொன்னியின் செல்வன் திரைப்பட படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்ற போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டார். தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வீட்டிலேயே தனிமைபடுத்திக்கொண்டு இருப்பதாக சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Good evening my near and dear friends relatives and my brothers and sisters In the political party,this evening I have tested positive and have self isolated myself,I humbly request all the dear ones who have been in contact for the past week to test yourself immediately
— R Sarath Kumar (@realsarathkumar) February 1, 2022
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்