ரஜினிகாந்தை சந்திக்க மருத்துவமனைக்கு யாரும் வர வேண்டாம் – மகள் சௌந்தர்யா வேண்டுகோள்!!

0

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் இது குறித்து அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி:

நடிகர் ரஜினிகாந்த் தற்போது “அண்ணாத்த” படத்தில் நடித்து வருகிறார். அப்படக்குழுவில் இருந்த 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதன் பிறகு நடிகர் ரஜினிகாந்த் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், நடிகர் ரஜினி 14 நாட்கள் தனிமையில் உள்ளார். இன்று ரத்த அழுத்த மாறுபாடுகள் காரணமாக அவர் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரை மருத்துவ குழு பரிசோதனை செய்து விட்டு அவர் விரைவாக டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்த் உடல் நலன் குறித்து திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக விசாரித்துள்ளார்.

மச்சா… ‘கேக்’ தாடா., நல்லா கேக்குதுடா – இணையத்தை கலக்கும் ‘கிறிஸ்துமஸ்’ மீம்ஸ்!!

தற்போது நடிகர் ரஜினியின் மகளும், இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அது ரஜினியின் உடல் நலன் குறித்து விசாரிப்பதற்காக அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள், தலைவர்கள் யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு உள்ளார். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here