நடிகர் பார்த்திபன் மற்றும் ஏஆர் ரஹ்மான் கலந்து கொண்ட இரவின் நிழல் ஆடியோ லான்ச் நிகழ்வில், மேடையிலிருந்து பார்த்திபன் மைக்கை கீழே வீசி அநாகரீகமாக நடந்து கொண்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அநாகரீக செயல்:
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான பார்த்திபன் இயக்கத்தில், 96 நிமிடங்களில் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட திரைப்படம் இரவில் நிழல். இந்த படத்தில், ஏ ஆர் ரஹ்மானுடன் சேர்ந்து ஆஸ்கர் விருது பெற்ற 3 பேர் இசை அமைப்பாளராக பணியாற்றி உள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், பேச ஆரம்பித்த பார்த்திபன், இந்த திரைப்படம் மேற்கத்திய நாடுகளில் வெளியாகி இருந்தால் உலகமே கொண்டாடி இருக்கும் என்றும், தமிழ்த்திரை கலைஞரிடம் பல திறமை உள்ளது என்றும் பேசினார்.
தொடர்ந்து, இவர் பேசும் போது மைக் வேலை செய்யாததால், அந்த மைக்கை மேடையில் இருந்து தூக்கி வீசி எறிந்தார். இதைப் பார்த்த, ஏ ஆர் ரகுமான் அதிர்ச்சியில், ஷாக்காகினார். பின்னர், புது மைக் பெற்று மீண்டும் பேச ஆரம்பித்த பார்த்திபன் தனது, அநாகரீகமான செயலுக்கு மன்னிப்பு கோரினார். இந்த செயல், கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேடையில் கடுப்பாகி மைக்கை தூக்கி எறிந்து நடிகர் பார்த்திபன்! அதிர்ந்த ஏ.ஆர்.ரகுமான்! #Tamilkural | #parthiban | #ARRahman | #IravinNizhal | pic.twitter.com/n3CbHh0X4z
— Tamil Kural (@TamilKural_live) May 2, 2022
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்