எதற்காகவும், எந்த விஷயத்திற்காகவும் பொறாமை பட்டதே இல்லை..,மறைந்த கோவை குணாவை குறித்து பேசிய மதுரை முத்து!!

0
எதற்காகவும், எந்த விஷயத்திற்காகவும் பொறாமை பட்டதே இல்லை.., ,மறைந்த கோவை குணாவை குறித்து பேசிய மதுரை முத்து!!
எதற்காகவும், எந்த விஷயத்திற்காகவும் பொறாமை பட்டதே இல்லை.., ,மறைந்த கோவை குணாவை குறித்து பேசிய மதுரை முத்து!!

நகைச்சுவை நடிகர் கோவை குணா நேற்று இறந்த நிலையில் இவரை குறித்து மதுரை முத்து பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கோவை குணா:

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காமெடியனாக அறிமுகமானவர் தான் கோவை குணா. எம்,ஜி. ஆர், எம்.ஆர். ராதா, ஜனகராஜ் போன்ற பல நடிகர்களின் குரல்கள் மூலம் மக்களை மகிழ்வித்த இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 60 வயதுடைய இவர் கடந்த ஒரு வார காலமாக உடல் நிலை சரியில்லாமல் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனை தொடர்ந்து நேற்று மாலை 4 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் இறப்புக்கு பல பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் மதுரை முத்து அவரின் மறைவு குறித்து பேசியது, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது, நடிகர் குணா இறந்தது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. பல மக்களை சிரிக்க வைத்த ஒருவர் தற்போது இல்லை. அவர் எதற்காகவும், எந்த விஷயத்திற்காகவும் பொறாமை பட்டதே இல்லை.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கவில்லையா? மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

மேலும் எம்,ஜி. ஆர், எம்.ஆர். ராதா, ஜனகராஜ் ஆகியோரின் குரலை அப்படியே மிமிக்கிரி செய்வார். அதுமட்டுமின்றி அவர்களை போல் நடித்தும் காட்டுவார். அவரோடு நான் பணியாற்றியது என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. அவருடைய ஆன்மா சாந்தி அடையனும் என்று கடவுளை பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார். தற்போது அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here