நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்களை போக்கும் வகையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவித்தது. இதற்கான கால அவகாசம் வருகிற மார்ச் 31ம் தேதி வரை வழங்கப்பட்டது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
எனவே வாக்காளர்கள் எளிய முறையில் இணைப்பு பணிகளை மேற்கொள்ள சிறப்பு முகாம் மற்றும் வீடு வீடாக பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து ஆன்லைன் மூலம் 6பி படிவத்தை நிரப்ப https://www.nvsp.in/ என்ற இணையத்தளத்திலும் மற்றும் “Voter Helpline” என்ற செயலி மூலமாகவும் வசதிகளை வழங்கியிருந்தது.
இந்நிலையில் இந்த இந்த இணைப்பு பணிக்கான கால அவகாசத்தை நிதித்துறை அமைச்சகம் மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி 2024ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை அடுத்த ஓராண்டுக்கு அவகாசத்தை வழங்கி உள்ளனர். இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.