நடிகர் கார்த்தியின் ரசிகர் மன்ற பொருளாளர் இறந்த நிலையில் அவர் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
நடிகர் கார்த்திக்:
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களின் கதைகளுக்கு உயிர் கொடுத்து அவர்களின் வாழ்க்கைக்கு விளக்கு ஏற்றி வைத்த நடிகர் என்றால் அது நடிகர் தான். அதன்படி பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ், லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி போன்ற திரைப்படங்களில் கார்த்திக் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த பின்னரே அந்த இரண்டு இயக்குனர்களுக்கும் தமிழ் சினிமாவில் அங்கீகாரம் கிடைத்தது என்று தான் கூற வேண்டும்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் கடந்த ஆண்டு மட்டும் விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் உள்ளிட்ட மூன்று வெற்றிப்படங்களை கொடுத்து தற்போது அவருடைய மார்க்கெட் எகிற தொடங்கியுள்ளது. இந்த நிலையில் நடிகர் கார்த்தி ரசிகர் மன்றத்தின் தென் கிழக்கு மாவட்ட நிர்வாகியாக பதவி வகித்த 29 வயதாகும் வினோத் என்ற ரசிகர் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி நடிகர் கார்த்திக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து சென்னை திருவான்மியூரில் உள்ள வினோத் இல்லத்திற்கு நடிகர் கார்த்தி நேரில் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் வினோத்தின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram