இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையிலான 2வது போட்டியில் இதுவரை இந்தியாவில் டி20 அரங்கில் நிகழாத ஒன்று நடைபெற்றுள்ளது.
IND vs NZ:
நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில், நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், நேற்று 2வது டி20 போட்டி நடைபெற்றது. இதில், 99 ரன்கள் மட்டுமே நியூசிலாந்து அணி எடுத்திருந்தது. இந்த இலக்கை துரத்திய இந்திய அணி 19.5 ஓவரில் தங்களது வெற்றியை உறுதி செய்தது.
IND vs NZ 2nd T20: கடைசி ஓவரில் இந்தியா வெற்றி…, ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா!!
இதனால், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. நேற்று நடைபெற்ற 2வது போட்டியில், இதுவரை டி 20 அரங்கில் இந்தியாவில் நிகழாத செயல் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதாவது, இரு அணிகளும் நேற்றைய போட்டியில் ஒரு சிக்ஸர் கூட அடிக்காத நிலை ஏற்பட்டது. இதில், டி20 போட்டிகளில் மட்டும் இதுவரை 94 சிக்ஸர்களை அடித்துள்ள சூர்யகுமார் யாதவ் கூட சிக்ஸர் அடிக்காமல் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
ஆனால், சூர்யகுமார் இந்த போட்டியில் சிக்ஸர் அடிக்காமல் இருந்தாலும், 26* ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்ததால், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் 47 டி20 போட்டிகளில் விளையாடி உள்ள இவர், 11வது முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.