பள்ளிகளில் போதைப் பழக்கம் மிக அதிகமாகவும், பெரிய பிரச்சனையாகவும் உருவெடுத்துள்ளதால் அரசு இதனை கட்டுப்படுத்த சீரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கார்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கார்த்தி வேண்டுகோள்:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தி, அண்மையில் விருமன் திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் வெளியாகி, மிகப்பெரிய அளவில் ஹிட் படைத்தது. இவரும், இவரது அண்ணனும் தொடர்ந்து பல சமூக சேவைகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா அகரம் என்ற அறக்கட்டளை மூலம் பல மாணவர்களின் கல்விக்கு உதவி புரிந்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி விழா ஒன்றில் பங்கேற்ற நடிகர் கார்த்தி, பள்ளிகளில் போதைப் பழக்கம் மிகப்பெரிய பிரச்சினையாக மாறி உள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் கார்த்தியின் இந்த புதிய பதிவு, இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய பேசுபொருள் ஆகி உள்ளது.