23 ரன் வித்தியாசத்தில் இலங்கை த்ரில் வெற்றி.., 6 வது முறையாக கிடைத்த பட்டம்.., இந்தியாவை வீழ்த்தியது இதற்குத்தானா?

0

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இறுதி ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்று 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.

ஆசிய கோப்பை டி20 இறுதிப் போட்டி!!

ஆசிய கோப்பை தொடருக்கான இறுதி ஆட்டத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. இதில் ராஜபக்சே 45 பந்துகளில் 71 ரன்கள், ஹசரங்கா டி சில்வா 36 ரன்னும், தனஞ்செய டி சில்வா 28 ரன் எடுத்தனர். இதன் பின் 171 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் களம் இறங்கியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் பாகிஸ்தான் அணி வீரர்கள் அனைவரும் இலங்கை அணி பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முன்னணி வீரர்கள் அனைவரும் அவுட்டாகினர். இதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய முகமது ரிஸ்வான் மட்டும் தாக்குப் பிடித்து அரை சதமடித்து 55 ரன்னில் அவுட்டானார். பின்னர் இப்திகார் அகமது 32 ரன்கள் எடுத்தார். இறுதியில், பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதனால் இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 6 முறை ஆசிய கோப்பைக்கான சாம்பியன் பட்டத்தை வென்று இலங்கை அணி அசத்தியது. இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததை அடுத்து, ரசிகர்கள் அனைவரும் இந்திய அணியை சூப்பர் 4 ஆட்டத்தில் போராடி எதற்கு வெற்றி பெறணும் என கேலி செய்து வருகின்றனர். ஆனாலும் பாகிஸ்தான் அணி இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்து 2 ஆம் இடம் பிடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here