உலகமே வியந்து பார்க்கக்கூடிய பல வெற்றிப் படங்கள் தமிழ் சினிமாவில் இருந்தாலும் இன்று வரை ரசிகர்களுக்கு புரியாத திரைப்படம் என்றால் அது ஹே ராம் தான். இப்படத்தினை உலக நாயகன் கமல்ஹாசன் நடித்தது மட்டுமின்றி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மகாத்மா காந்தியை மையமாக கொண்ட இந்த கதையில் நடிகர் ஷாருக்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து பல தடங்களுக்கு பிறகு அந்த படத்தை எடுத்து முடித்தார் நடிகர் கமல். இந்த படத்திற்காக தன்னிடம் உள்ள எல்லா பணத்தையும் செலவழித்துள்ளார். இதனால் பணிபுரிந்தவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் தவித்து வந்துள்ளார்.
அவரின் பண கஷ்டத்தை பார்த்த நடிகர் ஷாருக்கான் எனக்கு சம்பளம் வேண்டாம் என்று கூறியுள்ளார். இத்தனை கஷ்டங்களுக்கு பிறகு கமல் இப்படத்தை திரைக்கு கொண்டு வந்தார். ஆனால் படக்குழுவினர் எதிர்பார்த்த அளவிற்கு ஹேராம் வெற்றி அடையவில்லை. இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படுதோல்வி அடைந்தது.