நடிகர் கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது தங்களது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு மகிழ்ச்சியான பதிவை பதிவிட்டுள்ளார்.
கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன்:
தற்போதைய சினிமா வட்டாரங்களில் ட்ரெண்டிங் ஜோடியாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன். நடிகர் கெளதம் கார்த்திக் கடல் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ என்ற இடத்தை பிடிப்பதற்கு போராடி வருகிறார். மேலும் ஹரஹர மகாதேவகி என்ற அடல்ட் படத்தில் நடித்து அடல்ட் நாயகன் என்று பெயரெடுத்து சர்ச்சையில் சிக்கினார்.
தற்போது அது போன்ற கதைகள் வந்தால், நிராகரித்து விட்டு தரமான கதையில் நடிக்க வேண்டுமென கதைகளை நிதானமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் தேவராட்டம் படத்தில் ஒன்றாக நடித்த மஞ்சிமா மோகனை காதலித்து வந்ததாக சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டது. எங்கே சென்றாலும் இருவரும் ஒன்றாக சென்று வந்த நிலையில் கடந்த ஆண்டு மஞ்சிமா மோகனை கரம் பிடித்தார் கெளதம் கார்த்திக்.
அவர்களின் திருமணத்திற்கு சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். திருமணம் ஆகி கொஞ்ச நாட்கள் ஆன நிலையில் கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் தங்களது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு மகிழ்ச்சியான பதிவை பதிவிட்டுள்ளார். அதாவது இருவரும் கட்டி அணைத்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, என்னுடைய சந்தோஷமான இடம் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
View this post on Instagram