சீனியர் பட்டத்தை வென்ற ஜூனியர் சாம்பியன்…, தேசிய பேட்மிண்டன் தொடரில் அபாரம்!!

0

தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில், மகளிருக்கான ஒற்றையர் பிரிவில், சீனியர் சாம்பியனான அனுபமா உபாத்யாயா சீனியர் பட்டத்தை வென்று அசத்தி உள்ளார்.

தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்:

சீனியர் வீரர்களுக்கான தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் இந்தியாவின் புனே மற்றும் மகாராஷ்டிராவில் கடந்த பிப்ரவரி 22ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளின் கீழ் ஆடவர் மற்றும் மகளிர் கலந்து கொண்டனர்.

இதில், முன்னாள் ஜூனியர் உலக நம்பர் ஒன் வீராங்கனையான ஹரியானாவின் அனுபமா உபாத்யாயா மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் பங்கு பெற்றார். இவர், ஆரம்ப நிலை போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று நடைபெற இந்த இறுதிப் போட்டியில், இவர் ஆகர்ஷி காஷ்யப்பை எதிர்த்துப் போட்டியிட்டார்.

இரு பலம் வாய்ந்த வீராங்கனைகளுக்கு இடையிலான இந்த போட்டியில், முதல் செட்டை 20-22 என்ற கணக்கில் இழந்த அனுபமா உபாத்யாயா, அடுத்தடுத்து 2 செட்டுகளை 21-17, 24-22 என்ற கணக்கில் போராடி வென்றார். இதன் மூலம், அனுபமா உபாத்யாயா 2-1 என்ற செட் கணக்கில் ஆகர்ஷி காஷ்யப்பை வீழ்த்தி, மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here