ரக்ஷிதா அவங்க கூட தான் நெருக்கமா இருக்காங்க., இனி நாங்க சேர வாய்ப்பே இல்லை., கதறும் தினேஷ்!!

0
ரக்ஷிதா அவங்க கூட தான் நெருக்கமா இருக்காங்க., இனி நாங்க சேர வாய்ப்பே இல்லை., கதறும் தினேஷ்!!

விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி சீரியலில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி. இதை தொடர்ந்து ”நாச்சியார்புரம்” என்ற சீரியலில் தனது கணவருடன் இணைந்து அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படி இருவரும் ஒற்றுமையாக தங்களின் கெரியர் மற்றும் திருமண வாழ்க்கையை வாழ்ந்து வந்த நிலையில் கடந்த வருடம், சில மனஸ்தாபங்களால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இப்படி இருக்கையில் கடந்த 2 தினங்களுக்கு முன், தன் கணவர் தன்னை கடும் வார்த்தைகளால் காயப்படுத்துவதாக ரக்ஷிதா புகார் அளித்திருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால் இவர்கள் பல மாதங்களாக தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில், திடீரென தினேஷ் மீது இவர் குற்றம் சுமத்தியிருப்பதை கேட்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இப்படி தன் மீது ரக்ஷிதா புகார் கொடுப்பதற்கு அவருடைய நெருங்கிய தோழி தான் காரணம் என தினேஷ் கூறியுள்ளார். அதாவது இவர் ரக்ஷிதாவின் நெருங்கிய தோழி டப்பிங் ஆர்டிஸ்ட் ஜி.ஜி க்கு கால் செய்து தன் பக்கம் இருக்கும் நியாயத்தை ரக்ஷிதாவிடம் கூறும் படி பேசியுள்ளார்.

சர்ச்சை புயல் பயில்வான் ரங்கநாதனின் மகளை பார்த்துள்ளீர்களா? இதோ புகைப்படம் உள்ளே!!

ஆனால் ரக்ஷிதா தன் தோழியின் சொல்லை கேட்டு , தினேஷ் தவறாக பேசுவதாகவும் மிரட்டுவதாகவும் சொல்லி புகார் கொடுத்துள்ளாராம். மேலும் கணவன் மனைவிக்குள் இருந்த சின்ன பிரச்சனையை ரக்ஷிதாவின் தோழி ஜிஜி தான் பெரிதாக்கியதாகவும், இதோடு இவர்கள் பிரிவதற்கு ஜி ஜி தான் காரணம் என்றும் தினேஷ் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் இனிமேலும் நாங்கள் சேர கொஞ்சம் கூட வாய்ப்பில்லை என தினேஷ் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here