நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிந்து ஒரு ஆண்டுகளுக்கு மேல் ஆனநிலையில் அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் – ஐஸ்வர்யா:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இவர் தனது ஆசை காதல் மனைவியான ஐஸ்வர்யாவை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரிய போவதாக அறிவித்து ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தினார். தற்போது வரை அவர்கள் சேர்வதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் இருந்து வருகிறது. ஏனென்றால் தனுஷ் எங்கு சென்றாலும், தனது மகன்களுடன் மட்டுமே செல்கிறார்.
எதிர்நீச்சல் நாயகியின் இரண்டாவது காதலன் இவர் தானா?? இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!
மீபத்தில் கூட போயஸ் கார்டனில் புது வீடு கட்டிய போது கூட ஐஸ்வர்யா வரவில்லை. அதுமட்டுமின்றி அவர்கள் முறைப்படி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதாக கூட ஒரு வதந்தி வெளியானது. இந்நிலையில் அவர்கள் பிரிந்து ஒரு ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிந்து ஓராண்டுக்கு மேல் ஆனபோதிலும் தற்போது வரை அவர்கள் இருவரும் நீதிமன்றம் செல்லவில்லை.
எனவே அவர்கள் கண்டிப்பாக சேர்ந்து விடுவார்கள் என்றும், அதுமட்டுமின்றி, தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆசைப்படி புது வீடு கட்டி போயஸ் கார்டனில் குடியேறி இருப்பதால் , இருவரும் சேர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்னர் வெளியான வதந்திகளைப் போல இதுவும் இருந்து விடக் கூடாது என்று ரசிகர்கள் கடவுளை பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.