பிரபல நகைச்சுவை நடிகர் பாலாஜி, போலீஸ் எஸ்ஐ ஒருவர் தனது மனைவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக இருவரையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
மனைவிக்கு தொல்லை:
சென்னையில் காவல் உதவி ஆய்வாளர் ஆக உள்ள மனோஜ் குமார் மீது நடிகர் பாலாஜி அளித்த புகாரின் பேரில், கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் பாலாஜி, மனோஜ் இருவரையும் நேரில் அழைத்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாலாஜி, மனோஜ் குமாரின் புகைப்படத்தை காண்பித்து இவர் தனக்கு மற்றும் தன்னுடைய குடும்பத்திற்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக குற்றம் சாட்டினார். இதனால் நானும் என்னுடைய மனைவியும் சேர்ந்து வாழ முடியாத நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
எஸ்.வி சேகர் மீது வழக்குப்பதிவு – மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி!!
மேலும் காவல் துறையை சேர்ந்த ஒருவர் தவறு செய்தால் பணி மாற்றம் மட்டுமே தண்டனையாக வழங்கப்படுகிறது. அவ்வாறு செய்யாமல் மனோஜ் குமார் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் அல்லது பணி உயர்வு பெறாத வகையில் தடை நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தார். நான் வணங்கும் மூக்குப்பொடி சித்தர் அவருக்கு தண்டனை கொடுக்காமல் விட மாட்டார் என ஆதங்கத்துடன் கூறினார். விரைவில் நானும் எனது மனைவியும் சேர்ந்து வாழ்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.