தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் நலனுக்காக பள்ளி கல்வித்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இப்போது ஆதார் கார்டு கட்டாயமான ஒன்றாக மாறிவிட்டது. மேலும் இந்த ஆதார் கார்டில் ஏதேனும் பிழை இருந்தால் அதை திருத்தம் செய்தல், புதுப்பித்தல் மற்றும் ஆதார் பதிவு செய்தல் போன்ற பணிகளை செய்து முடிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது நாளை முதல் பள்ளிகளிலே மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பிக்கும் திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். அதன்படி நாளை இந்த திட்டத்தை கோவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைக்க இருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நாளை முதல் இதை பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களும் பள்ளி கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.