தமிழகத்தில் ராமேஸ்வரம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் மீன்பிடி தொழில் செய்து வரும் மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் அவ்வப்போது கைது செய்து வருகின்றனர். அதன் பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சருடன் நடவடிக்கை மேற்கொண்டு, விரைவிலே மீட்கப்பட்டும் வருகின்றனர்.
IND vs ENG 4th Test : போட்டியில் மழைக்கு வாய்ப்பு? வெளியான வானிலை ரிப்போர்ட்.!
அந்த வகையில் அண்மையில் 19 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அதன்படி இலங்கை நீதிமன்ற வழக்கு விசாரணையின் முடிவில், 18 மீனவர்களுக்கு விடுதலையும், ஒருவருக்கு மட்டும் 6 மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டனர். இந்த உத்தரவால் மீனவர்கள் உள்ளிட்ட பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.