ரோகித் சர்மா தலைமையிலான இந்திய ஆடவர் அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி நாளை (பிப்ரவரி 23) ராஞ்சி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த மைதானத்தின் வானிலை அறிக்கை குறித்து பின்வருமாறு காணலாம்.
அடுத்தடுத்து ஹிட் கொடுக்கும் விஜய்.., மளமளவென உயர்ந்த சம்பளம்.., எவ்வளவு தெரியுமா??
அதாவது ஆட்டத்தின் முதல் இரு நாட்களில் மிதமான வெப்பநிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4வது மற்றும் 5வது நாளில், சராசரி வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால், இந்த நாட்களில் ஈரப்பதம் 30 முதல் 35 % வரையில் இருக்கும் என்பதால், மழைக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் என கூறப்பட்டு இருந்தது. அதன்படி 20% மழை பொழிவுக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த வானிலை நிலவரத்தின் படி, இந்த ஆட்டத்தில் உறுதியாக பாதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.