இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பல்வேறு வசதிகளை பள்ளி மாணவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் கொரோனா காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை நடத்த இயலாத சூழல் ஏற்பட்டது. அப்போது புத்தகங்களை பார்த்து தேர்வு எழுத பல்வேறு விதமான கல்வி நிறுவனங்களும் அறிவுறுத்தியிருந்தது.
தமிழக பள்ளி மாணவர்களே., இனி இந்த வசதியும் செய்து தரப்படும்.., அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!!!
இதைத்தொடர்ந்து தற்போது புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் முறையை அமல்படுத்த, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி வரும் நவம்பர் மாதம் முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, இந்த தேர்வு சோதனை அடிப்படையில் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.