ஆதார் & ரேஷன் கார்டு இணைப்பு – காலக்கெடுவை நீட்டித்த மத்திய அரசு..!

0

ஆதார் கார்டு உடன் ரேஷன் கார்டினை இணைப்பதற்கான காலக்கெடுவை செப்டம்பர் மாதம் வரை மத்திய அரசு நீட்டித்து உள்ளது. ஆதார் எண் இணைக்கப்படாத ரேஷன் கார்டுகளை செப்டம்பர் 30ம் தேதி வரை ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஆதார் – ரேஷன் இணைப்பு:

மத்திய நுகர்வோர் அமைச்சகம் ஆதார் எண்ணுடன் ரேஷன் கார்டை இணைப்பதற்கு செப்டம்பர் 30 வரை காலக்கெடுவை நீட்டித்து உள்ளது. மேலும் ஆதார் இல்லாதவர்களின் ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம் செய்யப்படாது எனவும், பொது விநியோக முறையில் (பி.டி.எஸ்) பயன் பெறுபவர்களுக்கு ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படாது எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய அறிவிப்பு தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தெளிவாக விளக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் 23.5 கோடி ரேஷன் கார்டுகளில் உள்ள 90% குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு உள்ளது. மேலும் 80 கோடி பயனாளிகளில் 80% பேர் ரேஷன் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைத்து விட்டனர் எனவும் இதன் மூலம் அவர்களின் விபரங்கள் பாதுகாக்கப்படும் என மத்திய நுகர்வோர் அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here