மகளை துன்புறுத்திய மருமகனை கொலை செய்த மாமனார்.., ராஜபாளையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

0

மது போதையில் தன் மகளை தினமும் அடித்து துன்புறுத்திய மருமகனை உருட்டு கட்டையால் அடித்து கொன்ற மகளின் தந்தை.

இராஜபாளையம் அருகே மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில் முத்துக்குட்டி என்பவர் தன் மகளுடன் வசித்து வந்துள்ளார். மகள் மாசானதின் நடத்தையில் சந்தேகப்பட்ட மருமகன் நாகராஜ் தினமும் குடித்துவிட்டு சண்டை போட்டுள்ளதாக தெரிகிறது. வழக்கம்போல் நேற்றிரவும் நாகராஜ் குடித்துவிட்டு வீட்டில் ரகளை செய்துள்ளார் இதில் மாமனார் முத்துக் குட்டியையும் நாகராஜ் தாக்க முற்பட்டதாக தெரிகிறது இதில் ஆத்திரமடைந்த முத்துக்குட்டி, மருமகன் நாகராஜை கட்டையால் தாக்கியுள்ளார் இதில் நாகராஜ் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து முத்துக்குட்டி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் மீனாட்சிபுரம் கிராமத்தில் வருத்தத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here