கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்த சென்னை தம்பதியரிடம் 500 ரூபாய் லஞ்சம் கேட்ட மருத்துவ ஊழியர்கள் இரண்டு பேர் இப்போது போலீஸ் பிடியில் உள்ளனர். மருத்துவ ஊழியர்களின் இந்த மனிதாபிமானம் அற்ற செயல் மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சென்னையில் உள்ள புழல் கல்பாளையத்தில் வசித்து வரும் நந்தகோபால் மற்றும் அவருடைய மனைவி அருகில் உள்ள மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள சென்ற போது அங்குள்ள ஊழியர்கள் மருந்து காலியாகி விட்டதாகவும் 2 நாட்கள் பிறகு வரும்படியும் கூறியுள்ளனர். இதை அறிந்த அந்த தம்பதியர் என செய்வது என்று அறியாமல் வீடு திரும்ப முடிவு எடுத்தனர்.
இதையடுத்து அங்கிருந்த காவலராக பணிபுரிந்த தினகரன் என்பவர் 500 ரூபாய் தந்தால் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என கூறியுள்ளார். அதற்கு நந்தகோபாலும் சம்மதித்து அந்த மருத்துவமனையின் கம்பவுண்டரிடம் ரூபாய் 500 தந்து தடுப்பூசி போடு கொண்டனர். அதோடு மட்டும் நந்தகோபால் நில்லாமல் உடனே அருகில் உள்ள காவல்துறையில் புகார் தெரிவித்து மருத்துவமனையின் ஊழியர்கள் தினகரன், பிரசாந்த் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!