ஊரடங்கு முடியும் வரை பராமரிப்பு பணிக்காக மின்வாரியத்தில் தரப்படும் மின்தடைக்கான அனுமதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் தமிழகத்தில் ஏற்கனவே இருந்த முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. மேலும் அரசின் கொரோனா தோற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் கேட்டுக்கொண்டார். பெரும்பாலான மக்கள் ஊரடங்கு காரணமாக தங்கள் வீட்டில் இருந்து பணிபுரிந்து வருகின்றனர்.
மேலும் பள்ளி மாணவ, மாணவியர்களும் ஆன்லைன் மூலம் கல்வி பயின்று வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் ஏற்படும் மின்தடை இவர்களது பணியை பெரும் அளவில் பாதிக்கிறது. எனவே தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் பராமரிப்பு பணிகளுக்காக கொடுக்கப்படும் மின்தடைக்கான அனுமதி ஊரடங்கு முடியும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆன்லைன் வகுப்புகள், தேர்வுகள் உள்ளிட்டவற்றால் தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!