தமிழ் திரையுலகில் முன்னனி பிரபலங்களான நயன்தாரா, விக்னேஷ் சிவன் பற்றிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
விக்னேஷ் சிவன், நயன்தாரா
சினிமாவில் சூர்யா-ஜோதிகா, அஜித்-ஷாலினி தம்பதிகளை தொடந்து தற்போது ட்ரெண்டில் இருப்பது நயன்தாரா விக்னேஷ் சிவன் தான். நானும் ரவுடி தான் படத்தில் ஆரம்பித்த இவர்களின் நட்பு தற்போது காதலாக மலர்ந்துள்ளது. எங்கு போனாலும் ஒன்றாக தான் செல்வது.
விக்னேஷ் சிவன் பிறந்த நாளில் கூட கோவா சென்று கேக் கட் செய்து கொண்டாடினர். அந்த புகைப்படங்கள் அனைத்தும் காட்டுத்தீ போல பரவ ஆரம்பித்தது. இவர்களின் திருமணம் எப்பொழுது என்று அனைவருமே கேட்டுக்கொண்டு வருகின்றனர்.
ஆனால் இருவரும் நல்ல இடத்திற்கு வந்ததும் தான் திருமணம் என்ற முடிவில் இருப்பதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. தற்போது காத்து வாக்குல இரண்டு காதல் என்ற படம் தயாராகிக்கொண்டுள்ளது.
மேலும் நயன்தாராவின் பணத்தை விக்னேஷ் வேறு விதமாக இன்வெஸ்ட் செய்தும் வருகிறாராம். அந்த வகையில் 4 படங்கள் பக்கத்தில் வெளிவராமல் இருக்கிறதாம். மேலும் இந்த லாக்டவுன் வேறு போடப்பட்டுள்ளதால் திரையரங்குகள் திறக்க வாய்ப்பில்லை என்பதால் ஓடிடியில் வெளியிடலாமா என்றும் யோசித்து கொண்டிருக்கிறாராம்.இதனால் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாம்.