பாக்கியலட்சுமி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சுசித்ரா தனது இன்ஸ்டா பக்கத்தில் பல புகைபடங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது மொட்டை மாடியில் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியல் விஜய் டிவியின் டிஆர்பிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. பாரதி கண்ணம்மாவையே பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தது. இதற்கு காரணம் கோபியின் கள்ள தொடர்ப்பு தான். அது எப்பொழுது வெளிவரும் என்று பலரும் காத்துகொண்டுள்ளனர்.
மேலும் எழில், பாக்கியாவின் பாசம் அனைவரையும் கட்டி போட்டு விட்டது. இப்படி ஒரு அம்மா மகனா என்று பாராட்டும் அளவிற்கு உள்ளது. இதில் பாக்கியா தனது கணவனிடம் தனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காததால் எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பதை காட்டியிருப்பார்.
அவரும் சொந்த காலில் முன்னேற வேண்டும் என்றும் பல முயற்சிகளை எடுத்து வருகிறார். அனாலும் கோபி பாக்கியாவை கேவலமாக தான் நினைத்துக்கொண்டுள்ளார். இது எழிலுக்கு சுத்தமாக பிடிக்கவும் இல்லை.
இப்படி இருக்க தற்போது இந்த சீரியலில் பாக்கியாவாக நடிக்கும் சுசித்ரா சீரியலுக்கு அப்படியே எதிர்மறையானவர். ஒரு மாடர்ன் பெண்மணி என்றே சொல்லலாம். தற்போது அவர் மொட்டைமாடியில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.