சென்னை சைதாபேட்டையில் உள்ள காவேரி நகர் ரேஷன் கடையில் கொரோனா நிவாரண நிதிக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 7.36 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நிவாரண நிதி – அதிமுக உட்பட 3 கட்சிகள் நிதி வழங்கல்!!
7.36 லட்சம் திருட்டு:
திமுக-வின் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனா நிவாரண நிதியாக, குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி தமிழக அரசு முதல் தவணையான ரூபாய் 2000 மே 15 தேதியிலிருந்து மக்களுக்கு வழங்கி வருகின்றது.இந்த திட்டத்தை 10 ஆம் தேதியே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
நியாய விலைக் கடைகளில் நிவாரண நிதியை வழங்கும் பணி மே 15 முதல் தொடங்கியது. அதேபோல், டோக்கன்கள் வழங்கப்பட்டு முறையே நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகின்றது.இந்த நிலையில் சென்னை சைதாபேட்டையில் உள்ள காவேரி நகர் ரேஷன் கடையில் கொரோனா நிவாரண நிதிக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 7.36 லட்சம் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக ஏற்கனவே அரசு நிதி பற்றாக்குறையை சந்தித்து வருகிற நிலையில் இந்த சம்பவம் அனைவர்க்கும் மன வருத்தத்தை அளிக்கிறது.