தமிழகத்தில் தற்போது கொரோனா நிவாரண நிதிக்காக அனைத்து கட்சிகளும் நிதிகளை வழங்கி வருகின்றனர். தற்போது அந்த வகையில் அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் நிவாரண நிதியை வழங்கியுள்ளனர்.
தனது மனைவியின் இறுதி சடங்கில் பிபிஇ சூட்டில் அருண்ராஜா – இணையத்தை உலுக்கிய புகைப்படம்!!
கொரோனா நிவாரண நிதி:
தமிழகத்தில் தற்போது கொரோனா தடுப்பு பணிகளுக்காக பல தரப்பினர் முதல்வர் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்றவற்றினை வழங்கி வருகின்றனர். தற்போது அந்த வகையில் அதிமுக கட்சி சார்பாக முதல்வர் நிவாரண நிதியாக ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இதுகுறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அவர்கள் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.தமிழக மக்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்துவதற்காக முதல்வர் நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி அளிக்கப்படும்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதேபோல் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.க்களின் ஒரு மாத ஊதியம் கொரோனா நிவாரணமாக வழங்கப்படும் என்று அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தற்போது இவர்களை தொடர்ந்து வேறு இரு அரசியல் கட்சிகளும் நிவாரண நிதியை வழங்கியுள்ளது.அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொரோனா நிவாரண நிதியாக ரூ.10 லட்சமும் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொரோனா நிவாரண நிதியாக ரூ.10 லட்சமும் வழங்கியது. இதனை இரு கட்சியின் சார்பாக முத்தரசன் மற்றும் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.