தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாலை 6 மணிக்குமேல் சென்னை கிண்டியில் உள்ள ராஜபவனில் சந்தித்து பேச உள்ளனர் . மேலும் இந்த சந்திப்பில் இருவரும் தற்போது கொரோனா நிவாரணம் மற்றும் நோய் தடுப்புப் பணிகள் குறித்து விவாதிக்க உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தொற்று பரவும் வேகத்தை தடுக்க மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து தமிழக முதல்வர் மற்றும் ஆளுநர் விவாதிக்க உள்ளனர்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
தமீழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுதொடர்பான தகவல்களை தமிழக சுகாதாரத்துறை நாள் தோறும் அறிவித்து வருகிறது. மேலும் தற்போது கொரோனா பரவலை தடுக்க மே 10 முதல் 23 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.