சென்னையில் காதலி ஒருவர் தனது காதலனுக்காக மீன் குழம்பு செய்து கொடுத்தார். அதனை சாப்பிட்ட காதலன் சில மணி நேரத்தில் மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கணவனை எரித்து கொன்ற மனைவி – கள்ளக்காதலால் நடந்த விபரீதம்!!!
மீன் குழம்பு:
சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் என்பவர் பணி புரிந்து வந்தார். இவரும், சென்னை பள்ளிக்கரணையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் பெண் ஆகிய இருவரும் காதலித்து வந்தனர். அந்த பெண் கங்கைகொண்டான் சோழபுரம் பகுதியை சேர்ந்தவர்.இவர்கள் இருவரும் காதல் செய்து வந்தது அவர்கள் வீட்டாருக்கு தெரியவந்தது. அவர்களோ தங்களது பிள்ளைகளின் காதலை எதிர்க்காமல் அவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்து அவர்களுக்கு வருகின்ற 17ம் தேதி திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கம் ஏற்பட்டுள்ளது.இதனால் சென்னையில் நிஷாந்தின் அலுவலகம் இயங்காத காரணத்தினால் நிஷாந்த் தனது காதலியின் வீட்டிற்கு வந்துள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
மேலும் வீட்டிற்கு வந்த மாப்பிள்ளைக்கு பெண் வீட்டார் மீன் குழம்புடன் சிறப்பான சாப்பாட்டினை வழங்கினர். உணவு அருந்திய பின்பு நிஷாந்த் பெண் வீட்டாருடன் பேசி கொண்டிருக்கும் பொழுது திடிரென்று வாந்தி எடுக்க தொடங்கினார். இதனை தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அவருக்கு சிகிச்சையளிக்க வந்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்தார். இது அனைவரையும் அதிர வைத்தது. தற்போது இதுகுறித்து நிஷாந்தின் தந்தை போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் நிஷாந்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.