தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இதன் காரணமாக திரை உலகினரின் நலன் கருதி தற்போது வருகிற மே மாதம் 31ம் தேதி வரை திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்பு நடைபெறாது என்று அறிவிப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு நிறுத்தம்:
தமிழகத்தில் சுமார் இரண்டு மாதங்களாக கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் கோரதராண்டாவத்தினால் தினசரி 30 ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டும் 250க்கும் அதிகமானவர்கள் தங்களது உயிரை இழந்தும் வருகின்றனர். இதன் காரணமாக தற்போது தமிழகத்தில் மிக கடுமையான ஊரடங்கு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.மேலும் மக்கள் யாரும் அவசியமின்றி வெளியே வரவேண்டாம் என்றும் பாதுகாப்பாக வீட்டிலே இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு சற்று பொழுதுபோக்காக அமைவது திரைப்படம் மற்றும் சீரியல் மட்டுமே. தற்போது இதற்கும் ஓர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் திரை உலகினரின் நலன் கருதி பெப்சி அமைப்பின் தலைவரான ஆர்.கே.செல்வமணி ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, கொரோனா பரவல் காரணமாக வருகிற மே மாதம் 31ம் தேதி வரை திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெறாது என்று அறிவித்தார்.