கொரோனாவின் தொடக்க காலத்தில் உலக நாடுகளுக்கு உதவிய இந்திய நாட்டுக்கு தற்போது இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐநா தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு:
நாட்டில் கடந்த ஒரு வார காலமாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் லட்சத்தை தாண்டி வருகிறது. மேலும் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து 2 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இந்நிலையில் நேற்று புதிய உச்சமாக கொரோனா தொற்றினால் 3 ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் தங்களது உயிரை இழந்துள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கொரோனா பாதிப்பு மட்டுமின்றி தடுப்பூசி தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்ற பல பிரச்சனைகளை இந்தியா சந்தித்து வருகிறது, இதனால் மக்கள் பெரிதும் வேதனை அடைந்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவின் தற்போதைய நிலை குறித்து ஐநா தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது. ஐநா தலைவர் வோல்கன் போஸ்கிர் இதனை 75வது கூட்டத்தொடரில் தெரிவித்தார்.
ஜூலை 31ம் தேதி வரை ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி – நீதிமன்றம் அதிரடி!!
அதன்படி அவர் கூறியதாவது, உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவிற்கு உதவி செய்ய வேண்டிய நேரம் இது. கடந்த கொரோனா காலத்தில் அனைத்து உலக நாடுகளுக்கும் இந்தியா உதவி செய்தது. அந்த நாட்டுக்கு தற்போது இந்த நிலை ஏற்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது. எனது எண்ணங்கள் அனைத்தும் இந்தியாவுடனும் இந்திய மக்களுடன் தான் உள்ளது என்று ஐநா தலைவர் தனது வேதனையை தெரிவிதித்துள்ளார்.