14 வது ஐபிஎல் தொடர் – ரோஹித், ரெய்னாவை பின்னுக்கு தள்ளிய ஏபிடி! குவியும் வாழ்த்துக்கள்!!

0

இந்தியாவில் 14வது ஐபிஎல் மெகா தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்றைய போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதின.

ஏபி டி வில்லியர்ஸ்:

இந்தியாவில் கொரோனா நோய்பரவலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடர் பாதுகாப்பாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் பல பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் கடைசி நிமிடம் வரை யார் வெல்ல போகிறார்கள் என்பதை கணிக்க முடியாமல் இருந்தது. கடைசி கட்டத்தில் பெங்களூர் அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நேற்றைய போட்டியில் பெங்களூர் அணியின் ஏபி டி வில்லியர்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பெங்களூர் அணிக்கு இவரது ஆட்டம் தக்க உறுதுணையாக இருந்தது. நேற்றைய போட்டியில் ஏபி டி வில்லியர்ஸ் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் ஏபி டி வில்லியர்ஸ் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார் அதன்படி 5000 ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில் தற்போது ஏபி டி வில்லியர்ஸ் இடம்பிடித்துள்ளார்.

ஜூலை 31ம் தேதி வரை ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி – நீதிமன்றம் அதிரடி!!

இதுவரை 5000 ரன்களை கடந்தவர்களில் விராட் கோஹ்லி, ரெய்னா, தவான், ரோஹித் மற்றும் வார்னர் இடம்பிடித்திருந்தனர். தற்போது ஏபி டி வில்லியர்ஸ் இடம்பிடித்துள்ளார். மேலும் அதிவேகமாக 5000 ரன்களை கடந்த சாதனையில் ரோஹித் மற்றும் ரெய்னாவை முந்தியுள்ளார் ஏபி டி வில்லியர்ஸ். ரோஹித் தனது 5000 ரன்களை 187 போட்டிகளிலும், ரெய்னா தனது 5000 ரன்களை 173 போட்டிகளிலும் கடந்தனர். ஆனால் ஏபி டி வில்லியர்ஸ் தனது 5000 ரன்களை 168 போட்டிகளில் கடந்து சாதனை செய்துள்ளார். தற்போது இவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here