ஜூலை 31ம் தேதி வரை ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி – நீதிமன்றம் அதிரடி!!

0

நாட்டில் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை:

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. நாளுக்கு நாள் தொற்றினால் மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மக்களை மேலும் வேதனையடைய செய்யும் வகையில் தற்போது நாட்டில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல மக்கள் உயிரிழந்துள்ளதாக தொடர்ந்து தகவல் வெளிவந்த வண்ணமாக உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது ஆகிசிஜன் உற்பத்தியை அதிகரிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இதன் உற்பத்தியை அதிகரிக்க தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்குமாறு அந்த நிறுவனம் நீதிமன்றத்தில் மனு வழங்கியது. இதனால் பல்வேறு தரப்பினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் திறக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. அதன்படி மருத்துவ ஆக்சிசனை தயாரிக்க தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வருகிற ஜூலை மாதம் 31ம் தேதி வரை திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை 31ம் தேதிக்கு பின்பு அப்போது நிலையை ஆராய்ந்த பின்பே உற்பத்தி நீட்டிக்கப்படுமா என்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here