இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை காட்டு தீயை போல் மிக வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 3,32,730 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று:
நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா நோய் பரவளின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் நாட்டில் அனைத்து தரப்பு பாதுகாப்பு விதிமுறைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு இது வரை காணாத அளவில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய்த்தொற்றினால் 3,32,730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,62,63,695 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 2,263 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,86,920 ஆக அதிகரித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ‘யார்கர் மன்னன்’ நடராஜன் – சோகத்தில் ரசிகர்கள்!!
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து 1,93,279 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,36,48,159 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மருத்துவமனையில் 24,28,616 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் மருத்துவமனையில் 1,37,188 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.